ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட மூவர் வீர மரணம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் திங்கள்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் உட்பட, மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recommended Video

    தீவிரவாதிகள் தாக்குதல்.. நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட மூவர் வீர மரணம்

    குப்வாரா மாவட்டத்தின் கிரால்குண்ட் பகுதியில் உள்ள வாங்கம்-காசியாபாத்தில் சிபிஆர்எஃப் நாகா குழு மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    3 CRPF personnel including a jawan from Tamilnadu killed in militant attack in Jammu & Kashmir

    இந்த தாக்குதலில், மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, கூடுதல் படைகள் அங்கு விரைந்தன. மேலும் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வீர மரணமடைந்ததில் ஒருவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதாகும் சந்திர சேகர் என தெரியவந்துள்ளது. திருமணமானவர். சிஆர்பிஎப் 92வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்தார்.

    பிற இரு வீரர்களும், உத்தர பிரதேசம் மற்றும், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

    பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான, ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு இந்த தாக்குதலில் (TRF) ஈடுபட்டிருக்க கூடும் என்று சந்தேகம் நிலவுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+