வீடுகளை காலி செய்யுங்கள்: 55 முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ்
டெல்லி: தேர்தலில் தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ அலுவலக இல்லங்களை காலி செய்ய உள்ளனர். அரசுவீடுகளை காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலின் போது வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்றவர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த இல்லங்கள் மத்திய அரசின் நகர்ப்புறத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். அமைச்சர் பதவிபறிக்கப்படும் போதும், தேர்தலில் தோல்வி அடையும் போதும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இல்லங்கள் மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நியதி.
இந்நிலையில் தற்போது புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் 55 பேர்களுக்கு வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் ஜூன் 26-ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் தற்காலிகமாக தங்கி கொண்டு அலுவல் பணி செய்வதற்காக அரசுக்கு சொந்தமான அசோகா ஓட்டலில் அறைகள் ஒதுக்கப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறுகையில், புதிய அமைச்சர்கள் தங்களுக்கு ஓதுக்கப்படும் இல்லங்களில் பூஜை மற்றும் பிற காரியங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கலாம். அதனை கருத்தில் கொண்டு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் விரைவில் இல்லங்களை காலி செய்து தர வேண்டும் என கூறியுள்ளார்.
பதவி போய்விட்டால் பவர் போய்விடும் எல்லாமே போய்விடும் என்று சும்மாவா சொன்னார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications