ஹைதராபாத்தில் பேய் மழைக்கு 7 பேர் பலி - மக்களுக்கு எச்சரிக்கை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கனமழை கொட்டி வருகிறது. கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் இன்று பெய்த பேய் மழையினால் மக்கள் யாரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஹைதராபாத் நிர்வாகத்தால் எச்சரிக்கை விடப்பட்டது.

ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலையில் 2 மணி நேரத்தில் 95.75 மி.மீ மழை பெய்துள்ளது. பல தெருக்களில் அளவுக்கு அதிகமான நீர் சூழப்பட்டதால் வாகனங்கள் மிதந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Heavy rainfall causes severe water logging in parts of Hyderabad, vehicles submerged in rainwater in Secunderabad pic.twitter.com/7HFcWl92vH
— ANI (@ANI_news) August 31, 2016
முசீராபாத் பகுதியில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். ராமந்த்பூர் உப்பால் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். ஹைதராபாத்தில் ஒரே நாளில் மழைக்கு 7 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேய் மழை கொட்டி வருவதால் மக்கள் யாரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஹைதராபாத் நிர்வாகத்தால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!









Click it and Unblock the Notifications