சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேருக்கு தூக்கு... அதில் 72 பேர் முஸ்லீம்கள்
டெல்லி: நாடு சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும், அதில் 72 பேர் முஸ்லீம் கைதிகள் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவது சர்ச்சையாகியுள்ள நிலையில் இந்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
யாகூப் மேமனுக்கு எதிராக பலரும், ஆதரவாக சல்மான் கான் உள்ளிட்டோரும் எதிரெதிராக நின்று வாதங்களை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த விவகாரம் மதரீதியான மற்றும் அரசியல் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.

இதுவரை 1414 பேருக்குத் தூக்கு
இந்த நிலையில் டெல்லி, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மரண தண்டனை ஆய்வுத் திட்டத்தின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாடு சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

72 பேர் முஸ்லீம்கள்
தூக்கிலிடப்பட்ட கைதிகளில் முஸ்லீம்கள் 72 பேர் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. மொத்த தூக்குத் தண்டனையில் இது 5 சதவீதம் என்றும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

கரையான் அரித்து விட்ட ஆவணங்கள்
கேரளாவில் எத்தனை பேருக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது என்ற விவரம் கிடைக்கவில்லையாம். காரணம் பழைய ஆவணங்களை கரையான் அரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவிலும் கரையான் தொல்லை
அதேபோல ஆந்திராவிலும் 1968க்குப் பிறகு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம் கிடைக்கவில்லை. அங்கும் கரையான் பிரச்சினை காரணம் காட்டப்பட்டுள்ளது.

பீகாரில் சுத்தம்!
பீகாரில் இதுதொடர்பான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லையாம். எந்தவிதமான முறையான ஆவணங்களும் பீகாரில் இல்லையாம்.

தமிழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை
தமிழகத்தில் இதுபோன்ற தூக்குத் தண்டனை குறித்த ஆவணங்களைப் பார்வையிட உரிய துறைகளின் அனுமதி கிடைக்கவில்லையாம்.

18 மாநிலங்களில் தண்டனையே கிடையாது
இந்தியாவின் 18 மாநிலங்களில் 1947ம் ஆண்டு முதல் இதுவரை ஒருவர் கூட தூக்கில் போடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications