சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேருக்கு தூக்கு... அதில் 72 பேர் முஸ்லீம்கள்
டெல்லி: நாடு சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும், அதில் 72 பேர் முஸ்லீம் கைதிகள் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவது சர்ச்சையாகியுள்ள நிலையில் இந்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
யாகூப் மேமனுக்கு எதிராக பலரும், ஆதரவாக சல்மான் கான் உள்ளிட்டோரும் எதிரெதிராக நின்று வாதங்களை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த விவகாரம் மதரீதியான மற்றும் அரசியல் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.

இதுவரை 1414 பேருக்குத் தூக்கு
இந்த நிலையில் டெல்லி, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மரண தண்டனை ஆய்வுத் திட்டத்தின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாடு சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

72 பேர் முஸ்லீம்கள்
தூக்கிலிடப்பட்ட கைதிகளில் முஸ்லீம்கள் 72 பேர் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. மொத்த தூக்குத் தண்டனையில் இது 5 சதவீதம் என்றும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

கரையான் அரித்து விட்ட ஆவணங்கள்
கேரளாவில் எத்தனை பேருக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது என்ற விவரம் கிடைக்கவில்லையாம். காரணம் பழைய ஆவணங்களை கரையான் அரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவிலும் கரையான் தொல்லை
அதேபோல ஆந்திராவிலும் 1968க்குப் பிறகு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம் கிடைக்கவில்லை. அங்கும் கரையான் பிரச்சினை காரணம் காட்டப்பட்டுள்ளது.

பீகாரில் சுத்தம்!
பீகாரில் இதுதொடர்பான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லையாம். எந்தவிதமான முறையான ஆவணங்களும் பீகாரில் இல்லையாம்.

தமிழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை
தமிழகத்தில் இதுபோன்ற தூக்குத் தண்டனை குறித்த ஆவணங்களைப் பார்வையிட உரிய துறைகளின் அனுமதி கிடைக்கவில்லையாம்.

18 மாநிலங்களில் தண்டனையே கிடையாது
இந்தியாவின் 18 மாநிலங்களில் 1947ம் ஆண்டு முதல் இதுவரை ஒருவர் கூட தூக்கில் போடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications