உ.பியை உலுக்கிய சம்பவம்... 5 வயது சிறுமிக்கு 12 வயது சிறுவன் பாலியல் தொல்லை!

Subscribe to Oneindia Tamil

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கலான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் புதன் கிழமை நடந்துள்ளது.

A five-year-old girl was allegedly raped by a 12-year-old boy in Uttar Pradesh

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுவன் வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஹரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆபாச இணையதளங்களால், பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவுபடி, சமீபத்தில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்தநிலையில், 12 வயது சிறுவன், 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+