செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்!
விசாகப்பட்டினம்: உலகில் எத்தனையோ விலங்குகளை மனிதர்கள் வளர்த்து வந்தாலும் நாய்களுக்கு நிகராக எந்த விலங்கும் ஈடாகாது. தனது விசுவாசமான நன்றியுள்ள குணத்தால் மனிதர்களுடன் ஒன்றுடன், ஒன்றாக நாய்கள் ஐக்கியமாகி விட்டன.
ஒரு சில இடங்களில் பாம்புகளிடம் இருந்து தங்களது எஜமானர்களை காப்பற்றி நாய்கள் உயிரை கூட துறந்துள்ளன. ஒரு சில குடும்பத்தினர் செல்லமாக வளர்த்த நாய் இறந்து விட்டால் சோகத்தில் மூழ்கி போவது இயல்பாக நடப்பதுதான்.
ஆனால் தான் செல்லமாக வளர்த்து இறந்துபோன நாய்க்கு சிலை வைத்து மரியாதை செலுத்துகிறார் ஒரு மனிதர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் எங்கே நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.

செல்லப்பிள்ளையாக மாறிய நாய்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அம்பாபுரம் கிராமத்தை சேந்தவர் ஞான பிரகாச ராவ். இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். தனது பிள்ளைகளுக்கு நிகராக சுமார் 9 வருடங்களாக அந்த நாயை ஞான பிரகாச ராவ் கவனித்து வந்தார். வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் செல்லப்பிள்ளையாக அந்த நாய் மாறியது. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு நாயின் வாழ்க்கையில் விதி விளையாடியது.

விதியின் விளையாட்டு
உடல்நலக்குறைவு காரணமாக அந்த நாய் பரிதாபமாக இறந்தது. நாயின் இறப்பை கண்டு ஞான பிரகாச ராவ் மட்டுமல்ல அவரது குடும்பமே துடித்து போனது. மிகவும் செல்லமாக ஆசை, ஆசையாய் தான் வளர்த்த நாயை மனிதர்களுக்கு செய்வதுபோல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நாயின் நினைவு தினத்தன்று ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் ஞான பிரகாச ராவ்.

நாய்க்கு வெண்கல சிலை
வளர்ப்பு நாயின் 5-வது ஆண்டு நினைவு சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. வளர்ப்பு நாயின் உருவம் எப்போதும் நீங்காமல் மணத்துக்குள் நின்றதாலும், இனிமேலும் அந்த நினைவுகள் மனதில் நிலைத்திருக்க வேண்டியும் வளர்ப்பு நாயின் உருவத்தில் வெண்கல சிலை செய்தார் ஞான பிரகாச ராவ். 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் நாயின் உருவ சிலையை வைத்து மாலை அணிவித்து அதற்கு மரியாதை செலுத்தினார்கள்.

குழந்தை போல் கவனித்தோம்...
''நாங்கள் வளர்ப்பு நாயை ஒரு குழந்தை போன்று கவனித்துக் கொண்டோம். பல ஆண்டுகளாக நாங்கள் இந்த நாயை வளர்த்து வந்தோம். எங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. இந்த வெண்கல சிலை அந்த நாய்க்கு எங்களால் முடிந்த சிறு செயல்தான்'' என்று நன்றி பெருக்குடன் கூறினார் ஞான பிரகாச ராவ்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications