மோடியின் நில மசோதாவை 'நாறடித்த' ஜார்க்கண்ட் மக்கள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடியின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து ஒரு வித்தியாசமான போராட்டம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள லதேஹர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து போராட முடிவு செய்தனர். இதையடுத்து சுமார் 60 பேர் ஒன்று கூடி நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் நகலோடு பர்வாதிஹ் பிளாக் அலுவலகத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றனர்.
அந்த அலுவலகம் முன்பு அவர்கள் நகல்களை தெருவில் போட்டு அதில் இரண்டுக்கு போய் அதை நாறடித்தனர். இந்த போராட்டம் மூலம் மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளிப்பது தான் தங்களின் குறிக்கோள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இது போன்று ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வித்தியாசமான போராட்டம் நடந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.