ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
டெல்லி: 14 வயது சிறுமி ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அவருடைய பெற்றோரான ராஜேஷ், நுபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவை சேர்ந்தவர் மருத்துவர் ராஜேஷ் தல்வார். அவருடைய மனைவி நுபுர் தல்வார். இருவரும் பல் மருத்துவர்கள். இவர்களது ஒரே மகள் 14 வயது ஆருஷி. 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி இரவில், சிறுமி ஆருஷி தொண்டை அறுக்கப்பட்டு மர்மமான முறையில் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில், வீட்டு வேலைக்காரரான ஹேம்ராஜ் மீது முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால், மறுநாள் வீட்டின் மேல் மாடியில் ரத்தவெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தது அதிர்ச்சி அளித்தது.

அதைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு பின்னர் குடும்ப கவுரவத்தை காப்பதற்காக இந்த இரட்டை கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் முடிவுக்கு வந்து, ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின் ராஜேஷ் தல்வார் ஜாமீனில் வெளியே வந்தார்.
பல்வேறு மேல் முறையீடுகளை சந்திந்த இந்த வழக்கில், சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி அன்று ஆருஷியின் பெற்றோரான மருத்துவர் தம்பதியினர் மீது குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது.
குற்றவாளிகள் என தீர்ப்பு
அதன்பின் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்கு பிறகு, தனி நீதிபதி நீதிபதி ஷியாம்லால், ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ்-நுபுர் தல்வார் தம்பதியினரே ஆருஷியை கொலை செய்த குற்றவாளிகள் என்ற தீர்ப்பை நேற்று வழங்கினார்.
இந்த மாத இறுதியில் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி ஷியாம்லால், நேற்று இரு முறை வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தபின், மாலை 3.25 மணிக்கு இத் தீர்ப்பை வழங்கினார்.

ஆயுள் தண்டனை
இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் குறித்து இன்று நடைபெறும் வழக்கறிஞர்கள் வாதத்துக்குப்பின் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி ஷியாம்லால் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் இருதரப்பு வாதம் தொடங்கியது. ராஜேஷ், நுபுர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இருவருக்கும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, அரிதினும் அரிதான இந்த வழக்கில் இருவருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் மற்று தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications