புத்திர பாசம், வாரிசு அரசியல்.. மகாராஷ்டிராவில் மொத்த குழப்பத்திற்கும் இதுவே காரணம்.. விளாசும் பாஜக
மும்பை: வாரிசு அரசியலால்தான், இப்போது மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நிலவுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஆனால், ஆளுநர் அழைப்பு விடுத்தும் கூட போதிய அளவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி அமைக்க தயாரில்லை என்று பாஜக இன்று, அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அபிஷேக் திரிபாதி கூறுகையில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியை ஆதரித்த மகாராஷ்டிர மக்களை நாங்கள் கை விடுவது போன்ற சூழ்நிலையை சிவசேனா ஏற்படுத்திவிட்டது. தேர்தலுக்கு முன்பாக சிவசேனாவுக்கு முதல்வர் பதவி அளிப்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் திடீரென இப்போது அந்த பிரச்சினை கிளப்பப்பட்டது.
ஒருவேளை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் பதவியை பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தால், தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்லது வேறு எந்த சூழ்நிலையிலாவது சிவசேனா, அதை, வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எங்குமே அது சொல்லியதே கிடையாது.
மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்குபெற்றார். அப்போதும்கூட சிவசேனாவுக்கு முதல்வர் பதவி மீதான ஆசை தொடர்பாக எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் இப்போது புத்திர பாசத்தால் இத்தனை அரசியல் குழப்பத்திற்கும் உத்தவ் தாக்கரே காரணமாகியுள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி உள்ளார். அவருக்கு முதல்வர் பதவியைப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்பதற்காக மொத்த மகாராஷ்டிரா மக்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார் உத்தவ் தாக்கரே. ஒருவேளை சிவசேனா சார்பில் ஒருவர் முதல்வராக வேண்டும் என்றால் அந்த கட்சியில் வேறு சீனியர் தலைவர்கள் இருக்கிறார்களே? அவர்களை எல்லாம் விட்டுவிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாகியுள்ள ஆதித்திய தாக்கரேவை முதல்வராக்க வேண்டும் என்றால், அது மகன் பாசத்தில் தான். மொத்த அரசியல் குழப்பத்திற்கும் இதுதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
ஸ்விட்ச் ஆப் ஆன செல்போன்கள்.. தாக்கரேவை புறக்கணித்த தலைவர்கள்.. மீண்டும் உடையும் சிவசேனா? -
மம்தாவை போல் உத்தவ் தாக்கரேவிற்கு அடுத்த அடி.. பாஜக பக்கம் போகும் 5 எம்பிக்கள்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications