ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காதாம்.. மீண்டும் போராட்டத்திற்கு தயாராகிறது நெடுவாசல்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் இன்று தெரிவித்தார். இதனால் கடும் கோபம் அடைந்துள்ள நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்றும் விவசாயம் பாதிக்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக் சபாவில் கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 நாட்கள் நெடுவாசலில் மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தினார்கள்.
மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து நெடுவாசல் மக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், அதே மாவட்டத்தில் வடகாடு, நல்லாண்டார்கொல்லை பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

லோக் சபாவில் கேள்வி
இந்நிலையில், இன்று லோக் சபாவில் அதிமுக எம்பி பி.ஆர்.சுந்தரம் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசினார். அப்போது, நெடுவாசல் மக்கள் நடத்திய போராட்டம் குறித்தும் இந்த எரிவாயு திட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் மக்களின் அச்சத்தையும் தெரிவித்தார்.

இதுதான் பதில்..
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று பதில் அளித்தார். மேலும், எரிவாயு கிணறு அமைப்பதால் புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

மக்களோடு சந்திப்பு
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, நெடுவாசல் விவசாயிகள் பிரதிநிதிகளை நாளை மறுநாள் சந்தித்து பேச உள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திரா பிரதான் லோக் சபாவில் தெரிவித்தார்.

மக்கள் அதிர்ச்சி
ஹைட்ரோ கார்பன் குறித்து லோக் சபாவில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளது நெடுவாசல் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உறுதி அளித்ததால்தான் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் இப்படி பேசுவதா என்று நெடுவாசல் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மீண்டும் போராட்டம்
திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று நெடுவாசல் மக்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், லோக் சபாவில் அமைச்சர் அளித்த விளக்கத்தால் மீண்டும் போராட்டத்தில் குதிக்க நெடுவாசல் தயாராகி வருகிறது. இந்தப் போராட்டம் முன்பு நடைபெற்ற போராட்டத்தை விட வீரியம் மிக்கதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications