ஹெலிகாப்டர் பேர ஊழல்: தொழில் அதிபர் சூரஜ் பிரகாஷ் மெஹ்ரா வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு
டெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக தொழில் அதிபர் சூரஜ் பிரகாஷ் மெஹ்ராவின் வீட்டில் அமலாக்கப் பிரிவினர் இன்று சோதனை நடத்தினர்.
2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஐபிகளுக்கான 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்ச பணம் இந்தியர்களுக்கு இடைத் தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக 2013-ம் ஆண்டில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர், அவர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தியாகியிடம் கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தொழில் அதிபர் சூரஜ் பிரகாஷ் மெஹ்ராவின் வீட்டில் அமலாக்கப்பிரிவினர் இன்று சோதனை நடத்தினர்.
விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்திற்கு வருமாறு மெஹ்ராவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை. இதையடுத்து தான் இந்த சோதனை நடந்துள்ளது. ஹெல்காப்டர் ஒப்பந்தம் போடப்பட்டபோது இடைத்தரகர்கள் கிறிஸ்டியன் மிஷெல் மற்றும் ஹாலந்தை சேர்ந்த கிறிஸ்டீன் ஸ்பிலிட்டுடன் மெஹ்ரா தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
மெஹ்ராவின் இரட்டை குழந்தைகள் மிஷெல் மற்றும் ஸ்பிலிட்டுடன் சேர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த பீட்டில் நட் ஹோம் லிமிடெட் நிறுவனத்தில் பார்ட்னர்களாக உள்ளனனர். இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் மெஹ்ராவின் உறவினர் கரண் சேத்தியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மெஹ்ரா அண்மையில் தான் இங்கிலாந்தில் உணவகம் ஒன்றை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications