லண்டன் விமானத்தில் நைசாக ஏறிய மும்பை எலி... மீண்டும் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!
மும்பை: மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், எலி இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானம் மும்பை விமான நிலையத்திற்கே திரும்பியது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டிரிம்லைனர் விமானம் 240 பயணிகளுடன் நேற்று மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டது. விமானம் டெகரான் வான்பகுதியில் பறந்தபோது, விமானத்தின் உணவு விடுதியில் எலி ஒன்று சுற்றித் திரிவதை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார்.

உடனடியாக இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து துறை வகுத்துள்ள விதிமுறையின்படி, மும்பை விமான நிலையத்திற்கு விமானி தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானம் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பப் பட்டது.
அங்கு தொலைவான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட விமானம், பூச்சிகள், சிறு விலங்குகளை நீக்கும் வகையிலான வாயு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் திருப்பி அழைக்கப்பட்டது. விமானப் பயணிகள் வேறு விமானத்தில் லண்டன் அனுப்பிவைக்கப்பட்டனர்' என்றார்.
ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் இதேபோல் டெல்லி விமான நிலையத்திலிருந்து மிலன் நகருக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி காணப்பட்டதைத் தொடர்ந்து, 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது நினைவு கூரத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications