ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு.. ப.சிதம்பரத்தின் தொடர்பு பற்றியும் விசாரணை: சுப்ரீம் கோர்ட் உறுதி
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மலேசிய நிறுவனமான மேக்சிஸ் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன் கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேக்சிஸ் நிறுவனத் தின் அனந்தகிருஷ்ணனும், ரால்ப் மார்ஷலும் நேரில் ஆஜராகத் தவறினால், ஏர்செல் நிறுவனத்தின், '2ஜி' உரிமம் முடக்கப்படும் என, சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷியாவை சேர்ந்த, மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்தார் என, குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், 742 கோடி வரை பணம் கைமாறியதாக கூறப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது நேற்று, ஆஜராகி வாதிட்ட பாஜக எம்பியும், வழக்கறிஞருமான, சுப்பிரமணியன் சுவாமி, இதில் முன்னாள் நிதி அமைச்சரான சிதம்பரத்தின் பங்கு பற்றி விசாரிக்க கோரிக்கைவிடுத்தார்.
சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்தபோதுதான், ஏர்செல்-மேக்சிஸ் டீலுக்கு நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.
வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தது. தற்போதைய நிலையில், எங்களது உத்தரவு எந்த அளவுக்கு அமலாகிறது என்பதைத்தான் பார்த்து வருகிறோம், விரைவில் சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு பற்றி விசாரிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications