காந்தி கொலையில் 'புது குண்டு' போட்ட ஆர்.எஸ்.எஸ். சதிதிட்டம் தவிடுபொடி...மகிழ்ச்சியில் 'இந்து மகாசபை'
மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமே 4-வது குண்டு என கதைவிட்ட ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சதித்திட்டம் தகர்ந்து போனது என அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா 'மகிழ்ச்சி' தெரிவித்துள்ள
Recommended Video

மீரட்: மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமே 4-வது குண்டு என கதைவிட்ட ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சதித்திட்டம் தகர்ந்து போனது என அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா 'மகிழ்ச்சி' தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மும்பை பங்கஜ் பத்னிஸ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதற்காக நியமிக்கப்பட்ட அமரேந்தர் சரண், கோட்சேதான் காந்தியை கொலை செய்தார், ஆகையால் மறுவிசாரணை தேவை இல்லை என உச்சநீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டார்.
இதனை அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அசோக் சர்மா தெரிவித்துள்ளதாவது:

பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்த சதி
மகாத்மா காந்தியை கொலை செய்தது எங்களது இந்து மகாசபைதான். ஆனால் இந்த பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் 4-வது குண்டுதான் காந்தி மரணத்துக்கு காரணம் என ஆர்.எஸ்.எஸ்., பாஜக சதித் திட்டம் தீட்டி வழக்கு தொடர்ந்தது,. ஆனால் இந்த முயற்சி இப்போது தவிடு பொடியானது,

காந்தி கொலைக்கு பின் பிரிவு
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தாய் அமைப்புதான் இந்து மகாசபை. 1948-ம் ஆண்டு காந்தி படுகொலைக்குப் பின்னர் இந்து மகாசபையுடனான தொடர்புகளை ஆர்.எஸ்.எஸ். துண்டித்துக் கொண்டது,

உண்மையான துரோகிகள்
பின்னர் ஜஹவர்லால் நேருவுடன் இணைந்து கொண்டு காந்தி படுகொலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஒதுங்கிக் கொண்டது. இந்து மகாசபையைக் கைவிட்ட உண்மையான துரோகிகள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்தான்.

அழிக்க நினைத்தது
இப்போது காந்தி படுகொலையை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். காந்தி படுகொலையில் இருந்தே எங்களிடம் ஒதுங்கிக் கொண்டு எங்களை அழிக்க நினைத்ததும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்.
இவ்வாறு பண்டிட் அசோக் பண்டிட் சர்மா கூறினார்,
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications