வாட்ஸ் ஆப் மூலம் முத்தலாக் அனுப்பிய அலிகார் பல்கலை. பேராசிரியர்
அலிகார்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தனது மனைவி வாட்ஸ் ஆப் மூலம் முத்தலாக் என கூறி திருமண உறவை முறித்தது விவாத பொருளாகி இருக்கிறது.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமண பந்தத்தை விட்டு விலக முத்தலாக் என்று கூறுவது அந்த மதத்தின் சட்டமாகும். இந்த சட்டத்தை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த முத்தலாக் விவகாரம் பின்பற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடுத்துள்ளார்.

முத்தலாக் விவகாரம் சட்டத்துக்கு புறம்பானது என்று கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் தனது மனைவிக்கு முத்தலாக் என்று அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலித் பின் யூசுப் கான், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். தனது மனைவி யாஸ்மீன் அவரது படிப்பு குறித்து தன்னிடம் பொய் கூறியதாகவும் அவர் பட்டப்படிப்பு கூட படிக்க வில்லை என்றும் இதுபோல் ஏராளமான உண்மைகளை அவர் மறைத்ததால் அவருடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறி அவரையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதையடுத்து யாஸ்மீனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் முத்தலாக் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications