ஆனந்த் சர்மாவிற்கு பொருளாதாரம் தெரியவில்லையாம்… அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மாவிற்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தையே கறுப்பு பொருளாதாரம் போல் பிரதமர் மோடி ஆக்கிவிட்டார் என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா மோடி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஆனந்த் சர்மாவிற்கு பொருளாதாரமே தெரியவில்லை என்று அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதன்படி, இன்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியப் பொருளாதாரத்தையே கறுப்பு பொருளாதாரம் போல் பிரதமர் மோடி ஆக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டி பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆனந்த் சர்மாவிற்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று பதிலுக்கு குற்றம்சாட்டினார். மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து தொடர்ந்து விளக்கம் அளித்தார்.
மேலும், ராஜ்யசபாவில் பியூஷ் கோயல் பேசியதாவது:
அரசின் நடவடிக்கை குறித்து நேர்மையான மக்கள் கவலைப்பட தேவையில்லை. அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் கோபத்தை காட்டுகின்றனர். தேச நலனை கருத்தில் கொண்டே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமரின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு நாடே வரவேற்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பற்றி தவறாக புரிந்துள்ளார் ஆனந்த் சர்மா. நாட்டில் 500 நோட்டுகள் செல்லாது என்பது போன்ற மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கும் போது மக்களுக்கு சிறிய சங்கடம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பாதிக்கும் மேல் கறுப்புப் பணம் என்பதால்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் ராஜ்யசபாவில் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications