ஷாக்கிங்... எக்ஸ்ட்ரா போதைக்காக.. நாட்டு மதுவுடன் சானிடைசர்... ஆந்திராவில் 10 பேர் பலி!
பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அதிக போதை ஏற வேண்டும் என்பதற்காக நாட்டு மதுபானத்தில் சானிடைசரை கலந்து குடித்த 10 பேர் உயிரிழந்தனர். இது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரமாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் குறிசெடு என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகமாக போதை ஏற வேண்டும் என்பதற்காக நாட்டு மதுபானத்தில் சானிடைசர் கலந்து சிலர் குடித்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் இறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பேர் பிச்சைக்காரர்கள் என்பதும் மற்றவர்கள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஐந்து பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஐந்து பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும்போது இறந்தனர்.
கொரோனா கால கட்டத்தில் பலரும் தங்களுக்கு மது கிடைக்கவில்லை என்பதாலும், அதிக போதை ஏற வேண்டும் என்பதாலும், சானிடைசரை குடிக்கின்றனர். ஆந்திராவின் பல்வேறு இடங்களில் சானிடைசர் குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சானிடைசரில் இருக்கும் விஷத்தன்மை குடித்தவுடன் சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும். சிலருக்கும் வாழ் நாள் முழுவதும் சிறிது சிறிதாக குடல், கல்லீரல் ஆகியவற்றில் சிக்கலை உருவாக்கும். ஆதலால், சானிடைசர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
விஜயவாடா மாவட்டத்தில் மட்டும் கடந்த ஜூலை 20 ஆம் தேதி வரை சானிடைசர் குடித்த ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர்.
Recommended Video
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications