நடுரோட்டில் மகளை வெட்டிய தந்தை.. ஹைதராபாத்தில் அடுத்த ஆணவ கொலை முயற்சி.. அதிர வைக்கும் வீடியோ!
ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரும், அவரது மனைவியும் ஜாதி மாறி திருமணம் செய்த காரணத்தால் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரும், அவரது மனைவியும் ஜாதி மாறி திருமணம் செய்த காரணத்தால் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள். நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்தீப் தில்டா, 24 வயது நிரம்பிய இவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். இவரும் மாதவி என்ற வேறு சாதியை (ஓசி பிரிவு) சேர்ந்த பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் திருமணத்திற்கு எப்போதும் போல, பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. மாதவியின் தனத்தை மனோகர் சாரி, சந்தீப்பின் ஜாதியை காரணம் காட்டி இந்த திருமணத்திற்கு மறுத்து இருக்கிறார்.

திருமணம் நடந்தது
இந்த நிலையில் சந்தீப் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்து இருக்கிறார். பின் போலீஸ் இந்த விஷயத்தில் தலையிட்டு, இருவரும் மேஜர், திருமணம் செய்வதில் தவறில்லை என்றுள்ளனர். பின் கடைசியாக மாதவியின் தந்தை மனோகரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

தலையை வெட்டினார்
ஆனால், அவர் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்வது போல நடித்தது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதவியும் அவரது கணவர் சந்திப்பும் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்று உள்ளனர். ஏராகடா பகுதியில் இருக்கும் அந்த மார்க்கெட்டிற்கு வந்த மாதவியின் அப்பா மனோகர் சாரி, அங்கேயே வைத்து இரண்டு பேரையும் அரிவாளால் வெட்டினார்.
|
வெட்டும் வீடியோ
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஹெல்மெட்டை எடுத்துவிட்டு வரும் மனோகர் சாரி, முதலில் அரிவாளால் சந்தீப்பை வெட்டுகிறார். அவர் கீழே விழுந்ததும், தன்னுடைய மகள் மாதவியை வெட்டுகிறார். அதன்பின் மாதவியை தொடர்ந்து வெட்டுகிறார். இந்த நிலையில் ஒரு நபர் வந்து அவரை உதைத்துவிட்டு செல்கிறார்.

எப்படி இருக்கிறார்கள்
தற்போது இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் மாதவி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக சந்தீப் உடல் தேறி வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்
சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமார், அம்ருதவர்ஷினி திருமணமும் அதற்கு பின்பான பிரணாய் குமார் கொலையும் இந்தியாவையே அதிர செய்தது. தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமார், அம்ருதவர்ஷினி என்ற வேறுசாதி பெண்ணை திருமணம் செய்ததால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் சூடு அடங்கும் முன் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications