கெஜ்ரிவால் ராஜினாமா: நாடாளுமன்ற தேர்தலுடன் டெல்லி சட்டசபை தேர்தல்
டெல்லி: டெல்லி சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலகினார். முகேஷ் அம்பானியின் கைப்பாவைகளாக பாரதீயஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும்என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அவசரக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் முன் திரண்டிருந்த தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும் தாம் தவறு ஏதும் செய்திருந்தால் தம்மை மன்னிக்குமாறு கெஜ்ரிவால் கூறியபோது, அவரது ஆதரவாளர்கள், "இல்லை...இல்லை!" என்று கூறினார்கள்.

பா.ஜனதா - காங்கிரஸ்
தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், சமையல் எரிவாயு விலை நிர்ணயம் விவகாரத்தில் முகேஷ் அம்பானிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததும், ஆம் ஆத்மி அரசு தனது பக்கத்தில் கிடக்கும் முள் செடி என்று அம்பானி கூறினார் என்றும், ஜன் லோக்பால் மசோதா நிறைவேறினால் தங்களில் பாதிப்பேர் சிறையில் தள்ளப்படுவோம் என அவர்களில் பாதிபேர் அச்சப்பட்ட

மோடிக்குப் பின்னால்
அம்பானிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததுமே பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்துக்கொண்டதாக குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், கடந்த ஓராண்டாக பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பின்னாலும் அம்பானி உள்ளதாகவும், அவரது ( மோடி) பிரசாரத்திற்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

ராஜினாமா கடிதம்
தொண்டர்களிடையே பேசி முடித்ததும், இரவு 10மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற கெஜ்ரிவால், அவரிடம் தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

டெல்லி சட்டசபைக்குத் தேர்தல்
கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவி விலகியதை தொடர்ந்து, டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும்என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்
இதனிடையே, ஜன் லோக்பால் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்வதை தடுக்கும் அதிகாரம் டெல்லி ஆளுநருக்கு உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications