காங். தலைவர் பதவி போட்டியில் இருந்து விலகினார் அசோக் கெலாட்!முதல்வராக நீடிப்பது குறித்தும் சந்தேகம்?
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து நீடிப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்தார். சோனியா காந்தி குடும்பத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் அசோக் கெலாட்டை முன்னிறுத்தினர். இதனால் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் வெல்லும் சாத்தியங்கள் அதிகம் இருந்தன.
இத்தேர்தலில் தாங்களும் போட்டியிடுவதாக சசி தரூர், திக்விஜய்சிங், கமல்நாத் என பலரும் தெரிவித்து இருந்தனர். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வந்தது. அத்துடன் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவரானால் அவர் வகித்து வரும் முதல்வர் பதவி யாருக்கு? என்ற சிக்கலும் எழுந்தது. இது தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸில் பெரும் குழப்பமும் நிலவியது.
இந்நிலையில்தான் அசோக் கெலாட், ஆதரவு எம்.எல்.ஏக்கள் 82 பேர் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சச்சின் பைலட் இல்லாமல் வேறு ஒருவரைத்தான் முதல்வராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அப்படி சச்சின் பைல்ட் முதல்வராக்கப்பட்டால் தாங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம் எனவும் 82 எம்.எல்.ஏக்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்தனர்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இத்தனைக்கும் அசோக் கெலாட்தான் காரணம் எனவும் கோபப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர காங்கிரஸ் மேலிட பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில்தான் தாம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை; ராஜஸ்தான் முதல்வராக நீடிப்பதை சோனியா காந்தி முடிவு செய்வார்; இந்த விவகாரங்களுக்காக சோனியா காந்திடம் மன்னிப்பு கேட்கிறேன் என கூறியிருக்கிறார் அசோக் கெலாட்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications