ம.பி.யில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்!
இந்தூர்: மத்திய அமைச்சராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்து வந்தார்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் எல்.முருகன் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறகு தமிழ்நாடு தலைவராக பதவியேற்ற எல்.முருகன், மாநிலத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

மத்திய அமைச்சரவை
காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, தி.மு.க.வில் இருந்து கு.க.செல்வம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோரை பா.ஜ.க.வில் இணைப்பதில் எல்.முருகனின் பங்கு அதிகம். இது தவிர தமிழகத்தில் பாஜக கால்பதிக்கவே முடியாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் பா.ஜ.க 4 இடங்களில் வெற்றி பெற எல்,முருகன் மிக முக்கிய காரணமாக இருந்தார். எல்.முருகனின் திறமை, உழைப்பை பார்த்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்தது பா.ஜ.க தலைமை.

இணையமைச்சர்
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெற்றார் எல்.முருகன். மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டார். எல்.முருகன் இந்த பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் அவர் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும் என்ற நிலை எற்பட்டது. தமிழகத்தின் பா.ஜ.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் இல்லாததால் புதுவையில் இருந்து எல்.முருகனை எம்.பி.யாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எல்.முருகன்
இதற்காக புதுவை பா.ஜ,க சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ராஜ்ய சபா சீட்டை பாஜகவுக்கு ஒதுக்கும்படி கேட்டனர். ஆனால் அங்கு தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எல்.முருகன் தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

மூன்றாவது முறை
இந்த நிலையில்தான் அந்த இடத்துக்கு எல்.முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே காங்கிரஸின் திருநாவுக்கரசர், பா.ஜ.கவின் இல.கணேசன் ஆகியோர் ம.பி.யில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications