குஜராத் தேர்தல்: 5- வது முறையாக மாபெரும் வெற்றியுடன் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக: டைம்ஸ் நவ் சர்வே
குஜராத் சட்டசபை தேர்தலில் 5-வது முறையாக மாபெரும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே.
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 5-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் டிவி சேனல்-விஎம்ஆர் சர்வே.
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
5-வது முறையாக பாஜக ஆட்சி
இத்தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ்- விஎம்ஆர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி உள்ளன. இந்த கருத்து கணிப்புகளில் பாஜக 5-வது முறையாக வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு 118-134 இடங்கள்
தற்போதைய தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்போம் என 52% பேர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பாஜகவுக்கு 118 முதல் 134 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
காங்கிரஸுக்கு 49-61 இடங்கள்
இத்தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பதாக 37% பேர் கூறியுள்ளனர். அதாவது காங்கிரஸுக்கு 49 முதல் 61 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
அதிகபட்சம் 3 இடங்கள்
பாஜக, காங்கிரஸ் அல்லாமல் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்போம் என 11% பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மற்ற கட்சிகளுக்கு அதிகபட்சம் 3 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே