கருப்பு பண முதலை பங்கஜ் லோதியா... பின்னணி என்ன?
ராஜ்கோட்: தனக்கு வெளிநாட்டு வங்கியில் கணக்கே இல்லை என சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்த பங்கஜ் சிமன்லால் லோதியா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக மத்திய அரசு 3 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. அந்த 3 பேரில் ஒருவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் பங்கஜ் சிமன்லால் லோதியா.
இந்நிலையில் தனக்கு வெளிநாட்டில் வங்கி கணக்கே இல்லை. அப்படி இருக்கையில் கருப்பு பணம் வைத்திருப்பதாக வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று லோதியா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஜி வர்த்தக நிறுவனம்
பங்கஜ் சிமன்லால் லோதியா தங்க வர்த்தக நிறுவனமான ஸ்ரீஜி வர்த்தக நிறுவனத்தை ராஜ்கோட்டில் கடந்த 1997ம் ஆண்டு துவங்கினார். அந்த நிறுவனத்தின் இணையதளத்தின்படி அது முதலில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு பின்னர் தங்க வர்த்தகத்திற்கு சென்றுள்ளது. அந்த நிறுவனம் லோதியாவின் தந்தை ஸ்ரீ சிமன்லால் லால்ஜிபாய் லோதியா மற்றும் அவரின் சகோதரர் ஸ்ரீ கௌசிக் சிமன்லால் லோதியா ஆகியோரின் உதவியுடன் துவங்கப்பட்டது என்று இணையதளத்தில் உள்ளது.

2 நிறுவனங்கள்
ஸ்ரீஜி வர்த்தக குழுமத்தில் மேலும் 2 நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஸ்ரீஜி ஆர்னமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளை செய்து விற்பனை செய்கிறது. மற்றொறு நிறுவனமான ஸ்ரீஜி ரியாலிட்டி வீடுகளை கட்டிக் கொடுக்கிறது.

கிளைகள்
ராஜ்கோட் சந்தையில் லோதியா நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. தங்க வர்த்தகத்தில் அந்நிறுவனத்தின் கிளைகள் அகமதாபாத், டெல்லி, ஜெய்பூர், ராய்பூர், இந்தூர் மற்றும் பெங்களூரில் உள்ளது. கேரளாவில் கிளை துவங்கும் திட்டமும் உள்ளது. நம்பிக்கை, தூய்மை, நேர்மை எங்களின் தாரகமந்திரம் என்று அந்நிறுவன இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்
லண்டன் தங்க வர்த்தகர்கள் அசோசியேஷனுடன் ஸ்ரீஜி வர்த்தக நிறுவனத்திற்கு தொடர்பு உள்ளது. மேலும் அந்நிறுவனத்திற்கு தேசிய, சர்வதேச அளவில் தங்க வர்த்தகர்களுடன் தொடர்பு உள்ளது. பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு அது தங்க நாணயங்களை வழங்கி வருகிறது.

ஐ.டி.
நான் என் சொத்து விவரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறையிடம் தெரிவித்துவிட்டேன். எனக்கு அரசியல் தொடர்பு எதுவும் கிடையாது என்று லோதியா தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications