இந்தியாவை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்கலாம்: இங்கிலாந்து எச்சரிக்கை
டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டனில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு பணிக்குழு கூட்டம் கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இங்கிலாந்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்தனர். இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இங்கிலாந்து அதிகாரிகள் தங்களின் இந்திய சகாக்களிடம் தெரிவித்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளை விட ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் நடத்துமோ என்று தான் இங்கிலாந்து அஞ்சுகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸுக்கும் தொடர்பு உள்ளதால் அது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளை தாக்குதல் நடத்துவதில் இருந்து தடுக்கலாம் என்று நினைக்கிறது.
மும்பையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் கடந்த மே மாதம் மாயமானார்கள். அவர்கள் ஈராக், சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தனர். அதில் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ட்விட்டர் மூலம் ஆள் சேர்த்த பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். மேலும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய என்ஜினியர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர கிளம்பியபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications