வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு ஓடினாலும் சொத்துக்கள் பறிமுதல் - அருண் ஜெட்லி
வங்கிகளில் கடன் பாக்கி வைத்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.
டெல்லி: பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 2017 - 18 பொது பட்ஜெட்டை தாக்கல் லோக்சபாவில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் இதனை தெரிவித்தார்.
விஜய் மல்லையா போன்ற பணமுதலைகள் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய அருண் ஜெட்லி, தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
நிதி நிறுவனங்களை முறைப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறிய அவர், வேளாண் விளை பொருட்களில் முன்பேர வர்த்தகத்தை முறைப்படுத்தவும் புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
இந்தியாவிற்குள் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் நடைமுறை எளிமைபடுத்தப்படும் என்றார். அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் ரத்து செய்யப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
வீட்டு வசதி துறை இனி கட்டமைப்பு துறையாக வகைப்படுத்தப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார். கட்டமைப்பு துறையை போல வீட்டு வசதி நிறுவனங்களுக்கும் நிதி திரட்ட இதனால் வழி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
தொழில் உறவு, சமூக பாதுகாப்பு உட்பட 4 பிரிவாக தொழிலாளர் சட்டம் வகைப்படுத்தப்படும் என்றார். தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications