கர்நாடக வளர்ச்சி திட்டங்கள்... பேப்பர் இல்லாமல் ராகுல்காந்தி பேச தயாரா? மோடி சவால்
பேப்பர் இல்லாமல் 15 நிமிடங்கள் ராகுல் காந்தி பேச தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
மைசூரு: கர்நாடக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேப்பர் இல்லாமல் ராகுல்காந்தி பேச தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன.
15 பொது கூட்டங்களில் 5 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி பெங்களூர் வந்துள்ளார். அவர் சாம்ராஜநகர மாவட்டத்தில் சந்தேமரஹள்ளியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.

பாஜக புயல்
அவர் பேசுகையில், நான் இங்கு வருவதற்கு முன்னர் கர்நாடகத்தில் பாஜக அலை வீசுவதாக என்னிடம் கூறப்பட்டது. இப்போது நான் இங்கு இருக்கிறேன். நான் உங்களுக்கு ஒன்று கூறிக் கொள்கிறேன். கர்நாடகாவில் பாஜக அலை வீசவில்லை, அது பாஜக புயல் ஆகும்.

முதல்வர் யார்
முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கர்நாடக மக்களின் நம்பிக்கையாவார். இந்த மாநிலத்தின் அடுத்த முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். கடந்த 2005-ஆம் ஆண்டு மன்மோகன் சிங், 2009-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் கொடுப்பதாக உறுதியளித்தார்.

துண்டு பேப்பர்
அது என்ன ஆயிற்று? மன்மோகன் சிங்கை காங்கிரஸ் எவ்வாறு நடத்தியது என்பதை நாங்கள் பார்த்தோம். 15 நிமிடங்கள் ராகுல் தொடர்ந்து பேசினால் நான் அவரது முன்பு நிற்க முடியாது என்று கூறியுள்ளார். ஆம் அது சரிதான். நீங்கள் பேச மட்டும்தான் செய்வீர்கள். ஆனால் நாங்கள் வேலைக்காரர் ஆயிற்றே. உங்கள் முன்னால் நின்று பேச முடியுமா. நான் ஒரு சவால் விடுகிறேன். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை ஒரு துண்டு பேப்பர் கூட இல்லாமல் ராகுலால் கூறமுடியுமா.

சாதாரண மக்கள்
நீங்கள் இந்தி, ஆங்கிலம், உங்கள் தாய்மொழியான இத்தாலி மொழியில் கூட பட்டியலிடுங்கள். ஆனால் பேப்பரை பார்க்காமல் பேச வேண்டும். கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. லோக் ஆயுக்தா பாதுகாப்பாக இல்லை. அப்படியிருக்கும்போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்.

பல்வேறு திட்டங்கள்
சாம்ராஜநகர் மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர், வேலைவாய்ப்பு ஏன் கிடைக்கவில்லை. இங்குள்ள மாநில அரசு என்ன செய்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான செயலில் இறங்கியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கர்நாடக விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் என்றார் மோடி.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications