தமிழகத்துக்கு 4 டி.எம்.சி நீரை மே மாதத்துக்குள் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறது.

இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடக்கிறது.
இந்த வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு மே மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் அளவு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் கர்நாடக அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications