பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பியது! பேருந்துகள் இயக்கம்- தனியார் பள்ளிகள் மட்டும் மூடல்!!
பெங்களூரு: காவிரி பிரச்சனையில் போர்க்களமாக காட்சியளிக்கும் பெங்களூரு நகரம் இன்று இயல்பு நிலைமைக்கு திரும்பியது. பெங்களூருவில் அரசு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இயங்குகின்றன. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அவ்வளவுதான் பெங்களூரு நகரம் பற்றி எரிந்தது...
ஒரே நாளில் தமிழக பேருந்துகள், லாரிகள் 100க்கும் மேற்பட்டவை தீக்கிரையாக்கப்பட்டன... தமிழர்களின் நிறுவனங்கள் குறிவைத்து தேடித்தேடி தாக்கப்பட்டன. இதனால் பெங்களூரு நகரம் போர்க்களமானது.

துப்பாக்கிச் சூடு
வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் தப்பி ஓடும்போது கீழே விழுந்து பலியானார்.

ஊரடங்கு உத்தரவு
இதனைத் தொடர்ந்து துணை ராணுவப் படை பெங்களூரு நகரில் குவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதனால் நேற்று மாலை முதல் பெங்களூருவில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.

இயல்பு நிலை திரும்பியது
இந்த நிலையில் இன்று காலை பெங்களூரு நகரம் வழக்கம்போல இயங்கி வருகிறது. அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்துக்காக கர்நாடக பேருந்துகள் இயக்கப்படவில்லை.

தனியார் பள்ளிகள் மூடல்
பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தொடரும் தடை உத்தரவு
பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. 16 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்தும் அமலில் இருக்கிறது.

சட்ட வல்லுநர்கள் டீம் மும்முரம்
இதனிடையே காவிரி வழக்கில் செப்.20-ல் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தரப்பு வாதங்களை முன்வைக்க சட்ட வல்லுநர்கள் மும்முரமாக இயங்கி வருகின்றனர். அதேபோல் காவிரி கண்காணிப்புக் குழு கோரிய ஆவணங்களைத் தாக்கல் செய்வதிலும் சட்ட வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications