காவிரி நீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய முடிவு
2000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு: காவிரியில், இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி வீதம் தண்ணீரை, மறு உத்தரவு வரும் வரை திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் திறக்க முடியாத நிலை உள்ளது என அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான உயர் தொழில்நுட்பக் குழு தமிழகம் மற்றும் கர்நாடகாவில், கள ஆய்வு செய்து, 40 பக்க அறிக்கையை, தாக்கல் செய்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த அக்டோபர் 17ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வால்கர் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, காவிரி பாசனப்பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய உயர்நிலை தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது காவிரியில் எவ்வளவு தண்ணீரை, தமிழகம் மற்றும் கர்நாடகா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, நிபுணர் குழு எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. அதனால், அக்டோபர் 4ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மறு உத்தரவு வரும் வரை, காவிரியில், தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி வீதம், கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும். இந்த உத்தரவை, கர்நாடகா மதித்து நிறைவேற்ற வேண்டும். இரு மாநிலங்களிலும், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், அமைதி, சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் திறக்க முடியாத நிலை உள்ளது என அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 2000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications