ஹெலிகாப்டர் ஊழல்: மூன்று அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

Subscribe to Oneindia Tamil

CBI questions 3 senior officials in VIP chopper deal
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சக செயலர் சுதிர்குமார் உட்பட மூன்று அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது.

அண்மையில் இத்தாலி சென்றிருந்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, அந்நாட்டுக்கான இந்திய தூதருடன் இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர்கள் குப்தா, சுதிர்குமார், மேகலாயாவின் ஓய்வு பெற்ற டிஜிபியான என். ராமச்சந்திரன் ஆகியோரிடமும் ஹெலிகாப்டர் ஊழல் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

இவர்கள் 2004-2005ஆம் ஆண்டு காலத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பு வகித்த அதிகாரிகள் என்பதால் சிபிஐ இவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+