லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்.. கைதாக வாய்ப்பு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
ரயில்வே ஹோட்டல்களை தனியாருக்கு வழங்கியதில் நடந்த முறைகேட்டில் முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புள்ளதாக சிபிஐ அவரது வீட்டில் சோதனைகளை நடத்தியிருந்தது.

இந்த நிலையில் அடுத்த வாரம் லாலு பிரசாத் யாதவிடம் நேரடியாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. 5 அதிகாரிகள் குழு டெல்லியிலிருந்து பாட்னா விரைய உள்ளதாம். தற்போது வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் லாலுவ ைகைது செய்யவாய்ப்பில்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5ம் தேதி லாலு மற்றும் அவரது குடும்பத்தார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி (பீகார் துணை முதல்வர்) ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications