உயிருக்கே ஆபத்து.. வீட்டை போலீஸ் சுற்றிவளைத்துவிட்டது.. மேற்கு வங்க சிபிஐ இணை இயக்குனர் பகீர் பேட்டி

கொல்கத்தா போலீஸ் தன்னை கைது செய்ய தன்னுடைய வீட்டை சுற்றி வளைத்து இருக்கிறது என்று மேற்கு வங்க சிபிஐ இணை இயக்குனர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா போலீஸ் தன்னை கைது செய்ய தன்னுடைய வீட்டை சுற்றி வளைத்து இருக்கிறது என்று மேற்கு வங்க சிபிஐ இணை இயக்குனர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் மாநில அரசுக்கும், சிபிஐக்கும் எதிரான பிரச்சனை தற்போது உச்சம் அடைந்து இருக்கிறது. இன்று இரவு 8 மணி அளவில் கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது.

தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது. ஆனால் கமிஷ்னர் வீட்டிற்கு அருகில் வரும்போதே சிபிஐ அதிகாரிகள் போலீசால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்தனர்

கைது செய்தனர்

மேற்கு வங்க முதல்வர் மமதாவின் உத்தரவின்படி கொல்கத்தா போலீஸ், அந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது. தற்போது கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமார், கொல்கத்தா போலீசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருக்கிறது. அதே சமயம் கொல்கத்தாவின் மமதா பானர்ஜி தர்ணா இருந்து வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக இவர் தர்ணா இருந்து வருகிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இதற்கு இடையில் கொல்கத்தா போலீஸ், மேற்கு வங்கத்தில் இருக்கும் அனைத்து சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய முயன்று வருவதாக செய்திகள் வருகிறது. மேற்கு வங்க மாநில சிபிஐ இயக்குனர் மற்றும் சிபிஐ துணை இயக்குனர் இருவரையும் தற்போது போலீஸ் கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

போலீஸ் அதிரடி

போலீஸ் அதிரடி

கொல்கத்தாவில் மேற்கு வங்க சிபிஐ இயக்குனர் மற்றும் இணை இயக்குனரின் வீடு தற்போது போலீசால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மேற்கு வங்க சிபிஐ இணை இயக்குனர் பேட்டி அளித்து இருக்கிறார். அதில், என்னுடைய வீட்டை 56-60 போலீஸ் அதிகாரிகள் சுற்றி வளைத்து இருக்கிறார்கள்.

பயம்

பயம்

என்னுடைய வீட்டில் நானும் என் மனைவியும், 13 வயது மக்களும் இருக்கிறோம். எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்களை யாராவது பாதுகாக்க வேண்டும். என்னுடைய உயிருக்கு எதாவது ஆகிவிடும் என்று பயமாக இருக்கிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

என்னுடைய கவலை எல்லாம், இந்த ஊழல் குறித்த விவரங்களை போலீஸ் அழித்துவிடும் என்பதுதான், மத்திய அரசு இதை தலையிட வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.இன்று இரவிற்குள் சிபிஐயை சேர்ந்த முக்கிய மேற்கு வங்க அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+