பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி ... தமிழகமெங்கும் உற்சாகம்
டெல்லி: தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல்களில் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயங்கள் நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடையால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பாளர்கள் கவலையடைந்தனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. உண்ணாவிரதம், கடையடைப்பு நடைபெற்றது.
பாரம்பரிய வீர விளையாட்டுகளை காக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்தார். கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வரப்படவில்லை. 2016 பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அந்த துறை அமைச்சரும், தமிழகத்துக்கு வந்த மத்திய அமைச்சர்களும் வாக்குறுதி அளித்தனர். எனவே அவசர சட்டமோ, சிறப்பு உத்தரவோ பிறப்பித்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

விலங்குகள் நல வாரியம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியது. மத்திய அரசு சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியது. அட்டர்னி ஜெனரலின் எதிர்ப்பை தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை குழுவினர் 3 முறை டெல்லி சென்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தனர். இறுதியாக சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று சந்தித்தனர். இவர்களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்து சென்றார்.

மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை
தற்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது, மத்திய அமைச்சர் தரப்பில், ‘‘ஜல்லிக்கட்டில் முரட்டு காளைகளை களத்தில் நேருக்கு நேர் மோத விடுவீர்களா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வியால், அதிர்ச்சியடைந்த குழுவினர், ஜல்லிக்கட்டு வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார்கள். அதைப் பார்த்தப் பிறகே, அமைச்சரும், மற்றவர்களும் திருப்தி அடைந்தனராம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வந்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வாடிவாசல்களில் உற்சாகம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடிவாசல்களில் பட்டாசு வெடித்தனர். அதோடு இனிப்புகளை வழங்கி உற்சாகத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications