வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- சி.பி.ஐ கோரிக்கை
டெல்லி: மத்திய அரசு தமிழகத்தின் மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கியுள்ள 940 கோடி நிவாரணப் பணிகளுக்கு போதிய அளவில் இல்லை என்றும், இதனை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க இருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, "தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகளவிலான சேதங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
மக்கள் இம்மழை வெள்ளத்தால் உடைமைகள், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இயற்கை சீற்றம் மக்களின் வாழ்வாதாரத்தினையே புரட்டிப் போட்டுள்ளது.

மத்திய அரசின் கவனம் தேவை:
இந்நேரத்தில் மத்திய அரசின் கவனம் தமிழகத்தின் மீது படிந்தே ஆக வேண்டும். கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர்.

நீரில் தத்தளிக்கும் தமிழகம்:
பயிர்கள், விளை நிலங்கள், கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் சேதம் என தமிழகமே நீரில் தத்தளித்து வருகின்றது.அதனால், மத்தியில் இருந்து அதிகளவிலான உதவிகள் கிடைக்கப்பெற வேண்டியது தமிழகத்திற்கு அவசியம்.

அதிக நிவாரணம் தேவை:
மோடி தலைமையிலான அரசு மிக விரைவாக அதிகளவிலான நிவாரணத் தொகையினை மாநில அரசிற்கு வழங்க வேண்டும். இதுகுறித்த விவாதத்தினை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஒதுக்கீடு:
தமிழகத்தினை புரட்டிப் போட்ட மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரூ.940 கோடி நிவாரணத் தொகையை ஒதுக்கியது மத்திய அரசு. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகின்ற 26ம் தேதி முதல் துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications