100 ரூபாய் திருடியவருக்கு 8 ஆண்டு சிறை.. நீதிமன்றத்திலேயே கதறி அழுத குற்றவாளி
100 ரூபாய் திருடிய காரணத்திற்காக சண்டிகரை சேர்ந்த ஒருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சண்டிகர்: சட்ட திட்டங்களை பொறுத்த வரை இந்தியா கொஞ்சம் மனித நேயத்துடன் செயல்படுவது வழக்கம். உலக நாடுகள் வாரம் ஒருவரை தூக்கில் போடும் போது இந்தியா மனித உரிமைக்கு குரல் கொடுக்கும்.
அதே சமயத்தில் மோசமான குற்றம் செய்பவர்களை தண்டிக்கவும் நீதிமன்றங்கள் தவறியதில்லை. இந்த நிலையில் சண்டிகரில் இருக்கும் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் முக்கிய தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
21 வயது இளைஞர் ஒருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் செய்து குற்றம் 100 ரூபாய் உள்ள பர்ஸை திருடியது.

போலீஸ்
சில நாட்களுக்கு முன் சண்டிகரில் இருக்கும் போலீஸ் நிலையம் ஒன்றிற்கு இரவு 12.30க்கு கால் ஒன்று வந்துள்ளது. போனில் பேசிய ஆட்டோ டிரைவர் ஒருவர் தன்னுடைய பர்ஸை வழிப்பறி கொள்ளையர்கள் மூன்று பேர் பிடுங்கி கொண்டு சென்று விட்டதாக கூறியுள்ளார். அவர் சொன்ன அடையாளத்தை வைத்து போலீஸ் துருவ் நெஹி என்பவரை கைது செய்தது.

8 ஆண்டு
அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்த ஆட்டோ டிரைவரும் அவரை அடையாளம் காட்டினார். இதனால் நெஹிக்கு ஐபிசி 397 பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறையும், 3000 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிபதி விதித்தார். உடனைடியாக நெஹியை சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

கண்ணீர்
இந்த தீர்ப்பை கேட்டதும் நெஹி அங்கேயே கதறி அழுதுள்ளார். எனக்கு 21 வயதுதான் ஆகிறது, குடும்பத்தை நான்தான் பார்க்க வேண்டும். அப்பா இல்லை. குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதால் திருடிவிட்டேன் என்று அழுதுள்ளார். என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார்.

கருத்து
ஆனால் நீதிபதி கோபமாக பதில் அளித்துள்ளார். நீங்கள் எல்லாம் இருப்பதால்தான் மக்கள் ரோட்டில் இறங்கி சரியாக நடக்க முடியவில்லை. தண்டனை வழங்கப்பட்டால்தான் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்றார். நெஹியுடன் கொள்ளையடித்த இரண்டு பேரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் 18 வயதிற்கும் குறைவானவர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications