ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்... முறிகிறதா பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி?
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்துள்ளது.
அமராவதி : ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்துள்ளது. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 2 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 20.6.2014-ல் மாநிலங்களவையில் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை சிறப்பு அந்தஸ்து வழக்கப்படவில்லை.
இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

சந்திரபாபு நாயுடு கோரிக்கை நிராகரிப்பு
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி சந்திரபாபு நாயுடு பல முறை டெல்லி சென்று இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளார். ஆனால் எந்த பலனும் இல்லை. நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து ஆந்திர எம்.பிகள் சிறப்பு அந்தஸ்து கோரி புயலை கிளப்பி வருகின்றனர்.

கைவிரித்த மத்திய அரசு
ஆனால் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர இயலாது என்ற மத்திய நிதி அமைச்சகம் நேற்று சூசகமாக தெரிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவு சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் அமைச்சர்கள் ராஜினாமா
இதனால் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் எம்பிகள் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவரையும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு
விரைவில் இந்த அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளிப்பார்கள் என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி பிரிவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications