செல்போன் இல்லாதவர்கள். . தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய தளம், உதவி மையங்கள்.... அசத்தும் சத்தீஸ்கர்
ராய்ப்பூர்: செல்போன் இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த புதிய இணையதளத்தை அறிவித்துள்ள சத்தீஸ்கர் அரசு, மக்கள் இதில் பதிவு செய்ய உதவ மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உதவி மையங்களையும் அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால், தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் நிச்சயம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய அளவில் தடுப்பூசி பணிகள்
தேசிய அளவில் தடுப்பூசி முன்பதிவுக்குக் கோவின் தளம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இதில் முன்பதிவு செய்யக் கட்டாயம் மொபைல் எண் தேவை. இதனால் நாட்டில் செல்போன் மற்றும் இணைய வசதி இல்லாதவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது.

செல்போன் இல்லாதவர்களுக்கு புதிய தளம்
இந்நிலையில், சத்தீஸகர் அரசு மாநிலத்தில் இணையம் மற்றும் செல்போன் வசதியைக் கொண்டிருக்காதவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய புதிய தளத்தைத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இதில் முன்பதிவு செய்ய உதவும் வகையில் மாநிலத்தில் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட உதவி மையங்களையும் ஏற்படுத்தவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் கருத்து
மாநிலத்தில் அதிகளவில் இருக்கும் கிராமப்புற மக்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், "மாநிலத்தில் 48% மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். சில பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் மொமைபல் கூட இல்லை. அவர்களுக்கு இந்தத் தளம் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.

புதிய தளம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் http://cgteeka.cgstate.gov.in/user-registration என்ற தளத்தில் மொபைல் இல்லாதவர்கள் உதவி மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மாநிலத்தில் எங்கு எப்போது தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்களையும் இதே தளத்தில் மக்கள் அறிந்து கொள்ளலாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications