செல்போன் இல்லாதவர்கள். . தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய தளம், உதவி மையங்கள்.... அசத்தும் சத்தீஸ்கர்
ராய்ப்பூர்: செல்போன் இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த புதிய இணையதளத்தை அறிவித்துள்ள சத்தீஸ்கர் அரசு, மக்கள் இதில் பதிவு செய்ய உதவ மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உதவி மையங்களையும் அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால், தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் நிச்சயம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய அளவில் தடுப்பூசி பணிகள்
தேசிய அளவில் தடுப்பூசி முன்பதிவுக்குக் கோவின் தளம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இதில் முன்பதிவு செய்யக் கட்டாயம் மொபைல் எண் தேவை. இதனால் நாட்டில் செல்போன் மற்றும் இணைய வசதி இல்லாதவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது.

செல்போன் இல்லாதவர்களுக்கு புதிய தளம்
இந்நிலையில், சத்தீஸகர் அரசு மாநிலத்தில் இணையம் மற்றும் செல்போன் வசதியைக் கொண்டிருக்காதவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய புதிய தளத்தைத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இதில் முன்பதிவு செய்ய உதவும் வகையில் மாநிலத்தில் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட உதவி மையங்களையும் ஏற்படுத்தவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் கருத்து
மாநிலத்தில் அதிகளவில் இருக்கும் கிராமப்புற மக்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், "மாநிலத்தில் 48% மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். சில பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் மொமைபல் கூட இல்லை. அவர்களுக்கு இந்தத் தளம் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.

புதிய தளம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் http://cgteeka.cgstate.gov.in/user-registration என்ற தளத்தில் மொபைல் இல்லாதவர்கள் உதவி மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மாநிலத்தில் எங்கு எப்போது தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்களையும் இதே தளத்தில் மக்கள் அறிந்து கொள்ளலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications