செல்போன் இல்லாதவர்கள். . தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய தளம், உதவி மையங்கள்.... அசத்தும் சத்தீஸ்கர்
ராய்ப்பூர்: செல்போன் இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த புதிய இணையதளத்தை அறிவித்துள்ள சத்தீஸ்கர் அரசு, மக்கள் இதில் பதிவு செய்ய உதவ மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உதவி மையங்களையும் அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால், தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் நிச்சயம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய அளவில் தடுப்பூசி பணிகள்
தேசிய அளவில் தடுப்பூசி முன்பதிவுக்குக் கோவின் தளம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இதில் முன்பதிவு செய்யக் கட்டாயம் மொபைல் எண் தேவை. இதனால் நாட்டில் செல்போன் மற்றும் இணைய வசதி இல்லாதவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது.

செல்போன் இல்லாதவர்களுக்கு புதிய தளம்
இந்நிலையில், சத்தீஸகர் அரசு மாநிலத்தில் இணையம் மற்றும் செல்போன் வசதியைக் கொண்டிருக்காதவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய புதிய தளத்தைத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இதில் முன்பதிவு செய்ய உதவும் வகையில் மாநிலத்தில் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட உதவி மையங்களையும் ஏற்படுத்தவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் கருத்து
மாநிலத்தில் அதிகளவில் இருக்கும் கிராமப்புற மக்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், "மாநிலத்தில் 48% மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். சில பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் மொமைபல் கூட இல்லை. அவர்களுக்கு இந்தத் தளம் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.

புதிய தளம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் http://cgteeka.cgstate.gov.in/user-registration என்ற தளத்தில் மொபைல் இல்லாதவர்கள் உதவி மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மாநிலத்தில் எங்கு எப்போது தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்களையும் இதே தளத்தில் மக்கள் அறிந்து கொள்ளலாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications