நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன்சிங்கை ஏன் விசாரிக்கவில்லை? சிபிஐக்கு சிறப்பு கோர்ட் கேள்வி
டெல்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்ன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தாதது ஏன்? என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பரக் மற்றும் சிலர் மீதான வழக்கை முடித்து கொள்வதான அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்திருந்தது.
இந்த வழக்கை அவசரமாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிபிஐயிடம் சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அத்துறை சார்ந்த முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதா?
இந்த விவகாரத்தில் நிலக்கரித் துறை அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என சிபிஐ கருதாதது ஏன்? இந்த ஊழல் தொடர்பாக தெளிவான ஒரு நிலை ஏற்பட முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படுவது அவசியம் என சிபிஐ ஏன் உணரவில்லை?
முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.
2005ஆம் ஆண்டு குமாரமங்கலம் பிர்லாவின் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வசம்தான் நிலக்கரிச் சுரங்க துறை இருந்தது. ஆனால் மன்மோகன் சிங் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கேள்விகளை முன்வைத்துள்ளது.
நீதிமன்றக் கேள்விகளுக்கு பதிலளித்த சிபிஐ விசாரணை அதிகாரி, பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டதேதவிர பிரதமரிடம் விசாரணை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.
மேலும் வழக்கின் விசாரணைக் குறிப்பை சீலிடப்பட்ட உறையில் போட்டு நீதிமன்றத்த்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications