கோவை குண்டுவெடிப்பு.. 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
Recommended Video
திருவனந்தபுரம்: கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.
1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் வைக்கப்பட்ட குண்டுகள் மூலைமுடுக்கெல்லாம் வெடித்தன. பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களைக் கொலை செய்வதற்காக திட்டமிட்டு நகரின் பல பகுதிகளில் வைக்கப்பட்ட இந்த குண்டுகள் வெடித்ததில் 52 பேர் மரணமடைந்தனர்.
இந்த வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த நூகு (44) என்பவரை கேரளத்தில் போலீஸார் கைது செய்தனர்.
குண்டு வைத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நூகு மீது குற்றம்சாட்டப்பட்டது. கோவை குண்டுவெடிப்புக்கு பின்னர் கத்தார் நாட்டுக்கு தப்பிய நூகு கேரளா திரும்பினார்.
கேரளத்தில் பதுங்கியிருந்த நூகுவை சிறப்பு புலனாய்வு போலீஸார் கைது செய்தனர். நூகுவை போலீஸார் இன்று சென்னைக்கு கொண்டு வருகின்றனர்.