எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநருக்கு கண்டனம்- நாடு முழுவதும் நாளை காங். ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது.
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர் வாஜூபாய் வாலாவைக் கண்டித்து நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவில் ஆளுநர் மேற்கொண்ட முடிவு நாடு முழுவதும் பெரும் குழப்பத்தையும் அரசியல் சாசன நெருக்கடியையும் உருவாக்கி உள்ளது. கோவா, பீகார் மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை உள்ள காங்கிரஸ், ஆர்ஜேடி ஆட்சி அமைக்க கோருகின்றன.
All India Congress Committee General Secy Ashok Gehlot issues letter requesting all Pradesh Congress Committees, leaders & workers to organise state-wide dharnas at state capitals&dist HQs tomorrow to protest against K'taka Guv for inviting BS Yedurappa for making govt in K'taka. pic.twitter.com/5dCrttZZyp
— ANI (@ANI) May 17, 2018
இந்த நிலையில் மாநில கமிட்டிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கர்நாடகா ஆளுநரின் முடிவைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் தலைநகர்களில் கண்டன போராட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.