இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது மத்திய அரசுக்கு மூன்றாவது ஆண்டு கொண்டாட்டமா? ராகுல் ஆவேசம்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம் என பல பிரச்சனைகள் இருக்கும்போது ஆளும்கட்சி மூன்றாவது ஆண்டு
டெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம் என பல பிரச்சனைகள் இருக்கும்போது ஆளும்கட்சி மூன்றாவது ஆண்டு விழா கொண்டாட வேண்டுமா என ராகுல்காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டுள்ளார்.
பாரதி ஜனதா கட்சி கடந்த 2014 மே 16ஆம் தேதி ஆட்சிக்கு வந்தது. இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவு அடைகிறது. இந்தியா முழுவதும் மோடி சூறாவளிப் பயணம் மேற்கொண்டு இந்தியாவில் வேலைவாய்ப்பை பெருக்குவேன், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவேன் என பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்.

அவருடைய பேச்சை முதியவர்களை விட இளைய சமூகம் அதிகம் நம்பியது. அவர்கள் தான் அதிகளவில் வாக்களித்தனர். அதனால் மோடி பிரதமரானார். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது.
தற்போதும் இன்போசிஸ், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்களில் 2 லட்சம் பணியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகள் எந்ததுறையிலும் உருவாக்கப்படவில்லை. காரணம், பணமதிப்பிழப்பு அறிவிப்பால் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி, 'நாட்டில் வேலைவாய்ப்பின்மை விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம் என பல பிரச்சனைகள் இருக்கும்போது மூன்றாவது ஆண்டு கொண்டாட்டமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள், பாஜக அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தான் விமர்சிக்க முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி உள்பட எந்த தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது இல்லை என முடிவு செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications