எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத மோடியின் சுதந்திரதின உரை: காங்கிரஸ் புகார்
டெல்லி: சுதந்திர தினத்தன்று எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத உரையை பிரதமர் மோடி ஆற்றியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணீஷ் திவாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
புதிய பிரதமரின் முதல் சுதந்திர தின உரை என்பதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கான தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் திட்டங்களை அவர் தெளிவாகத் தெரிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கக் கூடும்.
ஆனால், சுதந்திர தின உரையில் சிறிய விஷயங்கள் மீது மட்டுமே பிரதமர் கவனம் செலுத்தியது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு மணீஷ்திவாரி கூறினார்.
ஷகீல் அகமது
மோடியின் உரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறியதாவது:
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத உரையை பிரதமர் மோடி ஆற்றியுள்ளார். அதில் புதிதாக ஏதுமில்லை. புதிய கருத்துகள், திட்டங்கள், முன்முயற்சிகள் ஆகியவற்றைப் பிரதமர் அறிவிக்கவில்லை.
நாட்டின் வளர்சிக்கு மதவாதமும், சாதியவாதமும் தடையாக இருக்கின்றன என்று மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் அரசியலானது மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை மோடி நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
அடிமட்ட அளவில், அவரது கட்சி அனைத்துக் கலவரங்கûலையும் பூசல்களையும் தூண்டு வருகிறது. மோடியின் வளர்ச்சியே மத மோதல்கள் மூலமே ஏற்பட்டது. துப்புரவையும், கழிப்பறைகளின் கட்டுமானத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
துப்புரவின் அவசியம் குறித்து ஒரு நாளைக்கு 10 முறை தொலைக்காட்சி விளம்பரம் மூலம் நடிகை வித்யா பாலன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துப்புரவுத் துறையின் விழிப்புணர்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதிதான் அது.
ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கித் தரப்போவதாக மோடி குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, வங்கிக் கிளைகள் இல்லாத கிராமங்களில் ஏழை மக்கள் அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கலாம் என்பதை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தியது.
இவ்வாறு ஷகீல் அகமது கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications