தீவிரவாதத்தின் தாய் வீடாக திகழ்கிறது பாகிஸ்தான்.. பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பாய்ச்சல் #brics
பனாஜி, கோவா: இந்தியாவின் அண்டை நாடுதான் தீவிவராதத்தின் தாயாக திகழ்கிறது என்று இன்று கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரிக்ஸ் மாநாட்டுத் தலைவர்களுடன் இன்று நடந்த கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார் மோடி. தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்திப் பேசினார். நமது சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய மிரட்டலாக திகழ்கிறது தீவிரவாதம். இந்தியாவின் அண்டை நாடு தீவிரவாதத்தின் தாயாக திகழ்வது மிகப் பெரிய துரதிர்ஷ்டம் ஆகும்.
Leaders of the BRICS nations pose for a group photograph in Goa #BRICS2016 pic.twitter.com/oWOnJkN1NM
— ANI (@ANI_news) October 16, 2016
பிரிக்ஸ் அமைப்பு வலுப்பட வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உலகளாவிய பொருளாதார சக்தியாக இது மாற வேண்டும். சர்வதேச அளவில் தீவிரவாதத்திற்கு எதிராக நாம் தீவிரம் காட்ட வேண்டும் என்றார் மோடி.
முன்னதாக ரஷ்ய அதிபர் புடின், இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்டோரைத் தனித் தனியாக சந்தித்துப் பேசினார் மோடி. நேற்று ரஷ்யாவுடன் இந்தியா 16 ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.