கோவாக்சின்.. இந்திய பரிசோதனையின் முதல் கட்டம் வெற்றி.. 2வது கட்டத்துக்கு தயார்!
புவனேஸ்வர்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் முதல் கட்ட மனித பரிசோதனையில் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் புவனேஸ்வர் எஸ்யுவி மருத்துவமனை மருத்துவர் வெங்கட ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக்கு நாடு முழுவதும் எய்ம்ஸ் உள்பட 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்த மருத்துவமனைகளில் நடத்தி முடிக்கப்பட்ட முதல் கட்ட மனித பரிசோதனைகளின் முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. முதற்கட்ட ஆய்வுக்கு 324 பேர் நாடு முழுவதும் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து புவனேஸ்வரில் இருக்கும் எஸ்யுஎம் மருத்துவமனையின் மருத்துவ அறிவியல் தலைமை மருத்துவர் வெங்கட ராவ் கூறுகையில், ''முதல் கட்ட மனித பரிசோதனை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வுக்கு தயாராகி வருகிறோம். முதல் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த தடுப்பு ஊசி எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இந்த ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு முறை டோஸ் அளிக்கப்பட்டது. முதல் டோஸ் முதல் நாளில் செலுத்தப்பட்டு, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இரண்டாவது டோஸ் 14வது நாளில் செலுத்தப்பட்டு, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 28, 42, 104, 194 ஆகிய நாட்களில் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும். இந்த ஆய்வில் கலந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விருப்பம் இருப்பவர்கள் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு தங்களது பெயரை http://ptctu.soa.ac.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications