கோவாக்சின்.. இந்திய பரிசோதனையின் முதல் கட்டம் வெற்றி.. 2வது கட்டத்துக்கு தயார்!
புவனேஸ்வர்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் முதல் கட்ட மனித பரிசோதனையில் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் புவனேஸ்வர் எஸ்யுவி மருத்துவமனை மருத்துவர் வெங்கட ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக்கு நாடு முழுவதும் எய்ம்ஸ் உள்பட 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்த மருத்துவமனைகளில் நடத்தி முடிக்கப்பட்ட முதல் கட்ட மனித பரிசோதனைகளின் முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. முதற்கட்ட ஆய்வுக்கு 324 பேர் நாடு முழுவதும் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து புவனேஸ்வரில் இருக்கும் எஸ்யுஎம் மருத்துவமனையின் மருத்துவ அறிவியல் தலைமை மருத்துவர் வெங்கட ராவ் கூறுகையில், ''முதல் கட்ட மனித பரிசோதனை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வுக்கு தயாராகி வருகிறோம். முதல் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த தடுப்பு ஊசி எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இந்த ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு முறை டோஸ் அளிக்கப்பட்டது. முதல் டோஸ் முதல் நாளில் செலுத்தப்பட்டு, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இரண்டாவது டோஸ் 14வது நாளில் செலுத்தப்பட்டு, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 28, 42, 104, 194 ஆகிய நாட்களில் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும். இந்த ஆய்வில் கலந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விருப்பம் இருப்பவர்கள் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு தங்களது பெயரை http://ptctu.soa.ac.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications