செயற்கை சுவாச கருவியை அகற்றிய வார்டு பாய்?.. ஐசியூவில் இருந்த கொரோனா நோயாளி மரணம்!
போபால்: மத்திய பிரதேசத்தில் கொரோனா நோயாளிக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவியை வார்டு பாய் அகற்றியதால் அந்த நோயாளி பலியாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் அலை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது. இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் உள்ளது.

கொரோனாவின் நிலை தீவிரமடைந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அத்தகைய சமயத்தில் செயற்கை கருவிகளையும் மருந்துகளையும் கொடுத்து சுவாசம் சீராக மருத்துவர்கள் உதவுகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சிவபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி உயிரிழந்தார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது வார்டு பாய் செயற்கை சுவாசத்தை அகற்றியதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவமனையில் இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 48 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய 3 பேர் கொண்ட மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை தகனம் செய்ய மாட்டோம் என குடும்பத்தினர் திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications