காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய ஜாவத் புயல் - ஒடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கனமழை
வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல் நேற்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்கியது.
புவனேஸ்வர்: வலுவிழந்த ஜாவத் புயல், தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி ஒடிசா கடலோர பகுதிகளை கடந்து இன்று நள்ளிரவில் மேற்கு வங்காள கடற்கரையை நெருங்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. ஜாவத் புயல் வலுவிழந்தாலும் ஓடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்து பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் சென்னை அருகே கரையை கடந்த நிலையில் இந்த பருவமழை காலத்தில் உருவான முதல் புயலுக்கு புயலுக்கு ஜவாத் என்று பெயர் சூட்டப்பட்டது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும்.
ஜவாத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த புயல் காரணமாக டிசம்பர் 5ஆம் தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்த நிலையில் ஜாவத் புயல் நேற்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இன்று மாலை வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரி கடற்கரை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் ஹூக்ளி ஆற்றில் படகு சேவைகள் நிறுத்தப்பட்டன. கடலோர ஓய்வு விடுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு வலியுறுத்தி உள்ளது.
பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications