கபில்சிபல் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கு: ஆம் ஆத்மியின் சாஷியா இல்மிக்கு கோர்ட் பிடி வாரண்ட்!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சாஷியா இல்மிக்கு ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்ட்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியினருக்கு இது அவதூறு வழக்கு நேரம் போல.. பாஜக முன்னாள் தலைவர் நிதின்கட்காரியை ஊழல்வாதி என்று அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்ததற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கில் ஜாமீன் தொகை கட்ட மறுத்ததால் முதலில் கேஜ்ரிவாலுக்கு 2 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் நடைபெற்ற விசாரணையின் போது ஜாமீன் தொகை கட்ட முடியாது.. அப்படி ஜாமீன் பெற்றால் கட்காரி ஊழலற்றவர் என்றாகிவிடும் என்று கேஜ்ரிவால் மறுத்தார்.
இதனால் அவரை மேலும் 14 நாட்கள் சிறையிலடைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவரான சாஷியா இல்மியும் அவதூறு வழக்கில் சிக்கியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் மகன் அமித்சிபல் தொடர்ந்த அவதூறு வழக்கில் இல்மிக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்ட்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் இல்மி ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியில் இருந்து சாஷியா இல்மி விலகக் கூடும் என்று செய்திகள் வெளியான நிலையில் இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications