டெல்லியில் காற்று மாசு... மக்கள் பாதிப்பு- தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லி: டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விடுமுறை அறிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசடைந்துள்ளது. மேலும் கார்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால் காற்று மாசுபடுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனால் கார்களின் பதிவு எண்களின் கூட்டுத் தொகை இரட்டை படையாக இருந்தால் ஒரு நாளும், ஒற்றை படையாக இருந்தால் மற்றொரு நாளும் இயக்க உத்தரவிடப்பட்டது. உலகிலேயே மாசான நகரங்களின் பட்டியலில் டெல்லி முன்னிலை வகித்துள்ளது. காற்று மாசு நிகழ்வானது ஆண்டுதோறும் தீவிரமடைகிறது.

மாசின் அளவு
இதையடுத்து காற்று மாசு ஓரளவு குறைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது காற்று மாசின் அளவு 451-ஆக உள்ளது. அதிகபட்ச அளவு 500 ஆகும். மாசின் அளவு 100-க்கு மேல் இருந்தாலே அது உடல்நிலைக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது.

புகைமூட்டம்
இந்நிலையில் இன்று காற்று மாசு கடுமையாக இருந்ததால் நகரமே புகைமூட்டமாக இருந்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் இந்த மாசான காற்றை சுவாசித்ததால் மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது.

குழந்தைகளை வெளியே அனுப்பாதீர்
இதனால் டெல்லி நகரம் வாயுக்களின் நகரம் என்று குறிப்பிட்டு இன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளையும், வயதானவர்களையும் வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்கிங் வேண்டாம்
இதுகுறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், காற்று மாசு அதிகமாக உள்ளதால் அதிகாலை நடைப்பயிற்சியை மக்கள் தவிர்க்க வேண்டும். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றார் அவர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications