குடிக்கவே இல்லை... தமிழகத்தின் பயிர் சாகுபடிக்கு எப்படி தண்ணீர் தருவது? கேட்பது தேவகவுடா
மைசூரு: கர்நாடகா விவசாயிகளுக்கு குடிக்கவே நீர் இல்லாத போது தமிழகத்தின் பயிர் சாகுபடிக்கு எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகா விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேவகவுடா கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஆண்டுக்கு மூன்றுபோகம் பயிர்களை விளைவிக்கின்றனர். ஆனால், கர்நாடகத்தில் ஒருபோக விளைச்சலுக்கு கூட போதுமான தண்ணீர் இல்லை.

குடிக்கவே தண்ணி இல்லை..
குடிக்கவே தண்ணீர் இல்லாதபோது தமிழ்நாட்டில் சம்பா பயிர் சாகுபடிக்கு எப்படி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியும்?

தமிழகத்தில் ஒற்றுமை
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருப்பவர்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது. அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்று, காவிரி நீர் விவகாரத்தில் மாநிலத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்.

வன்முறை வேண்டாம்
கர்நாடக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்துவது இயல்பானதுதான். ஆனால், சட்டம்-ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துகொண்டு யாரும் வன்முறையில் ஈடுபட கூடாது.

அமைதியாக போராடனும்
நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் ஒன்றுபட்டு அமைதியான முறையில் போராட வேண்டும். மாறாக, வன்முறை சார்ந்த போராட்டத்தால் நமது சொத்துகள் சேதமாவதைத் தவிர வேறொன்றையும் நம்மால் சாதித்துவிட முடியாது.
இவ்வாறு தேவகவுடா கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications