பன்சாரே, தாபோல்கர், கல்பர்கி மூவரையும் படுகொலை செய்தது 'சனாதன் சன்ஸ்தா' தீவிரவாதிகள்- திடுக் தகவல்!
மும்பை: சமூக ஆர்வலர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமிர் கெய்க்வாட்டுக்கும், கல்பர்கி, நரேந்திர தாபோல்கர் போன்றோர் கொலையில் சந்தேகிக்கப்படுவோருக்கும் தொடர்புள்ளது அவரது டைரியில் இருந்து தெரியவந்துள்ளது.
கோவாவில் இருந்து இயங்கும், வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர் கெய்க்வாட். இவர், சமூக ஆர்வலர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு தொடர்பாக கோலாப்பூரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் திடுக்கிடும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதிலுள்ள பலரது தொலைபேசி எண்களை போலீசார் ஆய்வு செய்தபோது, அவை கர்நாடகாவில் கொலை செய்யப்பட்ட எழுத்தாளர் கல்பர்கி மற்றும் கொலையான இடதுசாரி சிந்தனையாளர் நரேந்திர தாபோல்கர் ஆகியோர் கொலையில் தொடர்புள்ள குற்றவாளிகள் எண்கள் என்பது தெரியவந்தது.
எனவே, திட்டமிட்டே சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்கள், எதிர்க்கருத்து பரப்புவோரை கொலை செய்துவந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாபோல்கர் வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. கல்பர்கி மற்றும் கோவிந்த் பன்சாரே வழக்குகளை முறையே, கர்நாடக, மராட்டிய போலீசார் விசாரிக்கிறார்கள். தற்போது வழக்கு மூன்றும் ஒற்றை புள்ளியில் சந்தித்துள்ளதால், தங்களுக்குள் இம்மூன்று விசாரணை அமைப்புகளும், தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications